ஞாயிறு, 6 ஜனவரி, 2013

இசைப்புயலும் இனியநாட்களும்..


இசைப்புயலின் பிறந்தநாள் இன்று..உச்சம் தொட்டுவிட்ட உன்னத கலைஞன் ரகுமான்..எனக்குள் இசைப்புயல் மையம் கொண்டது பள்ளிநாட்களில் தான்..



பள்ளியின்  நூற்றாண்டு விழாவுக்காக எங்க கிளாஸ்ல எல்லாரையும் டான்ஸ் காம்படீசனுக்காக தண்ணி தெளிச்சி விட்டுடாங்க..நமக்கு டான்ஸ்லயெல்லாம் ஆர்வம் இல்லாட்டியும் கிளாஸ் நடக்காதேன்ற சின்ன சந்தோசம் மனசுக்குள்ள!விழாவுக்கு வேற, அப்போ இருந்த கல்விஅமைச்சர் வர்றதாக ஏற்பாடு..எங்களுக்கு டான்சுக்காக செலக்ட் பண்ணிருந்த பாட்டு ரகுமானின் 'வந்தேமாதாரம்' சாங்..முதல்நாள் பிராக்டிஸ்ல அந்த பாட்டை கேக்குறப்பவே எதோ ஒரு சிலிர்ப்பு மனசுக்குள்ள..


வரிகள் சரியா புரியலைன்னாலும் பாட்டோட ஆரம்பமான வந்தேமாதரம்ங்கறது மட்டும் மனசுக்குள்ள ரிப்பீட் மோட்ல ஓடிகிட்டே இருக்கும்..நமக்கு சுட்டுபோட்டாலும் டான்ஸ் வராது,இதுல டான்ஸ் சொல்லிகொடுக்குறதுக்குன்னு தனியா ஒரு மாஸ்டரை ஸ்பெஷல் அப்பாயின்மென்ட்ல வரவெச்சிருந்தாங்க..!

நாங்க ஒரு ஆறுபேரு,எத்தனை தடவை சொல்லி கொடுத்தாலும்,நாங்க மட்டும் தனியா ஏதோ  ஒரு ஸ்டெப்ல ஆடிகிட்ருப்போம்..இப்படி குரூப்பா ஆடுறதுல உள்ள ஒரு பிரச்சனை என்னானா,நாம ஒரு ஸ்டெப் தப்பா ஆடிட்டோம்னாலும் நம்ம பின்னால ஆடுறவனும் நம்மளால கன்பியூஸ் ஆயிடுவானுக!மாஸ்டரும் கடைசிநாள் வரை,எப்படி எப்படியோ சொல்லி கொடுத்தாரு..ம்ம்ஹூம்,வரல்லையே..!கடைசில அவரே கடுப்பாகி தம்பிகளா, நீங்க தயவுசெஞ்சு மொத ரோவுல நின்னுராதீங்க..கடைசில  ஒரு ஓராம நின்னு முன்னாடி ஆடுறவன பாத்து முடிஞ்சா வரைக்கும் சமாளிங்கடான்னு சொல்லிட்டு விட்டுட்டாரு..ஒரு வழியா நாங்களும் சமாளிச்சு ஆடி(?!) ப்ரோக்ராமை நல்லபடியா முடிச்சிட்டோம்..

டான்ஸ் தான் வர்ரலையே தவிர,அந்த வந்தே மாதரம் பாட்டு அப்படியே மனசுக்குள்ள நின்னுடுச்சி..

"தாயே உன்பெயர் சொல்லும் பொழுதே இதயத்தில் மின்னலை பாயுமே
இனிவரும் காலம் இளைஞனின் காலம்உண்கடல் மெல்லிசை பாடுமே!!"

இந்த வரிகளை இப்போ கேட்டாலும் அதே சிலிர்ப்பு..! இசை என்பது வெறும் ஒலி அல்ல..அது நம் வாழ்கையின் அடையாளம்.எப்போது கேட்டாலும் நாம் வாழ்ந்த நாட்களையும் சேர்த்து நினைவுமீட்டல் செய்யும் சக்தி இசைக்கு மட்டுமே உண்டு!!

 கோடானுகோடி இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளைகொண்டிருக்கும் ஆஸ்கர் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..உங்கள் இசை பயணத்தில் இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்தும் உங்கள் ரசிகர்களில் ஒருவன்..

இன்னும் பேசுவோம்,
சகா..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக