வெள்ளி, 18 ஜனவரி, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா-நியாயம் கேட்கும் சாந்தனு!!


பொங்கலுக்கு வெளியாகி சந்தானம்,பவர் ஸ்டார் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் படம்,கண்ணு லட்டு தின்ன ஆசையா!.

இது எண்பதுகளில் வெளியான திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இயக்கிய இன்று போய் நாளை வா திரைப்படத்தின் காப்பி என்பது படம் பார்த்த எல்லோருக்குமே தெரியும்..க.ல.தி.ஆசையா திரைப்பட குழுவே  ஒரு பேட்டியில,இது  இன்று போய் நாளை  வா-வின் ரீமேக் தான் அப்படின்னு சொல்லியிருந்தாங்க..

இப்போ பிரச்சனை என்னான்னா இந்த படத்த தன்னோட முறையான அனுமதி இல்லாம படமா எடுத்திருக்கிறதா,கேஸ் போட்டு இருக்கார் பாக்கியராஜ்..ஆனா படம் ரிலீஸ் ஆகுற சமயத்துல லம்பா ஒரு அமவுண்ட் கொடுத்து பாக்கியராஜை ஆஃப் பண்ணிட்டதாகவும் ஒரு பேச்சு அடிபட்டுச்சு!!

இது ஒரு பக்கம் இருக்கப்ப பாக்கியராஜோட பையன் சாந்தனு,முதல்ல அப்பாகிட்ட வந்து தயாரிப்பாளர் ராம.நாராயணனும்,சந்தானமும் இந்த படத்தோட உரிமையை கேட்டாங்க..


ஆனா அப்பா அந்த கதைய என்னைய வச்சி எடுக்குறதா இருந்தாதால,தர மறுத்திட்டாரு.அதுக்கு அப்புறம் அப்பாவுக்கு தெரியாமலே இந்த படத்தை எடுத்து இப்போ ரிலிசும் பண்ணிட்டாங்க..இதுக்கு கவிதாலயா புஸ்பா கந்தசுவாமியும் உடந்தையா இருந்துருக்காங்க..ஆனா இதுக்காக ஒரு பைசா கூட அப்பாவுக்கு கிரெடிட்டா தரலை.. இது முழுக்க முழுக்க என் அப்பாவுக்கு சொந்தமான கதை..இதை திருடுனவங்களை சும்மா விடபோறதில்லைனும்,இந்த பிரச்சனைல அப்பாவுக்கு ஆதராவ எல்லாரும் குரல் கொடுக்கனும்னும் ட்விட்டர்ல சாந்தனு கேட்ருக்காரு..


இப்பல்லாம் அடுத்தவன் கதையை திருடுறது, இல்லைனா என் கதையை திருடிட்டான்னு கேஸ் போடுறது,இதான் ட்ரென்ட் போல!!எது எப்படியோ இந்த பிரச்சனை மூலமா படத்துக்கும்,சந்தானம் அன்ட் கோ-விற்கும் எக்ஸ்ட்ரா பப்ளிசிட்டி தான்!!

இன்னும் பேசுவோம்..
சகா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக