வியாழன், 15 ஆகஸ்ட், 2013

தலைவா-A Visual Treat for Vijay Fans

 ப்பல்லாம் தமிழ்படம் தமிழ்நாட்டை தவிர மத்த எல்லா ஊர்லயும் ரிலீஸ் ஆவறது ட்ரென்ட்டா மாறிக்கிட்ருக்கு!சினிமாவை எப்போதும் சினிமாவாக மட்டுமே பார்க்காத அரசியல்வாதிகளும்/மக்களும் ஏன் சில சினிமாக்கார்களும், இருக்கும்வரை இதெல்லாம் மாறப்போறதில்லை.நேத்து படம் ரிலீஸ் ஆவுறது லேட்டாகுறதை பத்தி விஜய் பேசுனத பாத்தப்ப நெறையவே அவரோட வலி புரிஞ்சிச்சு!



எல்லா பிரச்சனைகளையும் தாண்டி  'தலைவா' சீக்கிரம் ரிலீஸ் ஆவும்னு நம்புவோம்.லெட்ஸ் கோ டூ ரிவியூ..





 கதைன்னு பாத்தா நமக்கு ரொம்பவே பழக்கப்பட்ட நாயகன் டைப் "டான் ஸ்டோரி" தான்.மும்பைல உள்ள தமிழர்கள் எல்லாருக்கும் தலைவரா இருக்காரு சத்யராஜ்.அவரு செய்ற அடிதடி பஞ்சாயத்துகள் மகன் விஜயை பாதிக்ககூடாதுன்னு சின்ன வயசுலேயே ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிடுறாரு.ஒருகட்டத்துல சத்யராஜ் அவருக்கு வேண்டாதவர்களால கொல்லப்பட..மகன் விஜய் அவங்களை எப்படி பலிவாங்குறாரு..அப்பாவோட தலைவர் பதவி விஜய்க்கு எப்படி வருதுன்றது தான் தலைவா'வின்  ஒன்லைன் ஸ்டோரி!






விஜய்...வாவ்!!நாளுக்கு நாள் மனுஷன் ஸ்டைலிஷ் ஆகிட்டே இருக்காரு..சும்மாவே விஜய் செமையா டான்ஸ் ஆடுவாரு.இதுல டான்சரா வேற 'சலங்கையை'கட்டி விட்ருக்காங்க..கேக்கவா வேணும்?பட்டைய கெளப்பியிருக்காரு..பாங்கு அடிச்சிட்டு வாங்கண்ணா,வணக்கங்கண்ணா சாங் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னே வர்ற இந்தி சாங்கை கேட்டுட்டு விஜய் கொடுக்குற ரியாக்சன் பட்டாசு.வழக்கம்போல சந்தானம் இந்த படத்துலயும் போறபோக்குல சிக்ஸ் அடிக்கிறாரு."அடுத்தவன் ஐபோன்ல ஐ.எஸ்.டி. கால் பேசணும்னு நெனைக்குறது ரொம்ப தப்பு ப்ரோ'ன்னு கவுண்டர் அடிக்கிறதெல்லாம் செம..பல்லு போன கெழவன் வரைக்கும் எல்லாரையும் 'ப்ரோ'ன்னு கூப்பிட வச்சிட்டாரு!..அமலாபாலை பத்தி 'பெருசா' சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்கண்ணா!டைரக்டரும்,அ.பாலும் லவ்ஸ் பண்றதுக்கு  விஜயை பழிவாங்கிட்டாங்க போல :( 'யாரிந்த சாலையோரம்' நல்ல மெலோடி.ஜி.வி.பிரசாத் வாங்கண்ணா பாட்டுல ஒரு ஸ்டெப் கூட போட்ருக்காரு!!





டைரக்டர் விஜய்-அண்ணனை பத்தி சொல்ல தேவையில்லை..முன்னெல்லாம் ஹாலிவுட் படத்த மட்டும் சுட்டுட்ருந்தவரு இப்போ உள்ளூர் படங்களையும் விட்டு வைக்கலை..படத்தோட டைட்டில் கார்டுலயே மணிரத்னம்,ராம் கோபால் வர்மா,பிரியதர்ஷன் இப்படி எல்லாருக்கும் கிரெடிட் குடுத்துட்டாரு.அந்த பயம் இருக்கணும் மனசுல:-)

படத்தோட மிகப்பெரிய டிராபேக் என்னன்னா, ப்ரெஷ்ஷா எந்த சீனுமே இல்லையேன்ற பீல் வர்றதுதான்.மும்பைல நடக்குற பல காட்சிகள் அப்படியே நாயகன் படத்தை நியாபகப்படுத்துது.அப்புறம் சத்யராஜ் இறந்ததும் தலைவா'வா விஜய் மாறுறதெல்லாம் பக்கா தேவர்மகன் பார்ட் -2 பார்த்த எபெக்ட்.டான் ஸ்டோரி சொல்லணும்னு முடிவு பண்ணிட்டாங்க ஓகே.ஆனா,எத்தனையோ டான் படங்கள் இங்க பாத்தாச்சு.அதுலருந்து எப்படி டிப்பரெண்ட்டா காமிக்க போறோம்ன்றதுக்கான எந்த மெனக்கடலும் படத்துல இல்லை.அதுலயும் இன்டர்வெல் ட்விஸ்ட் எல்லாம் உஸ்ஸ்..வகையறாத்தான்! துப்பாக்கிக்கு அப்புறம் விஜயை வேற மாதிரி பாக்க ஆசைப்பட்ட மக்களுக்கு நிறையவே வருத்தம் தான்.இந்த டைரக்டரை பத்தி தெரிஞ்சும் எப்படி விஜய் கால்ஷிட் கொடுத்தாருன்னு தான் தெர்ல.சந்தானத்துல ஆரம்பிச்சு ஒய்.ஜி.எம். வரைக்கும் விஜய் அரசியலுக்கு வந்தே ஆகணும்ன்ற மாதிரி ஏகப்பட்ட பன்ச்'கள் பேசுறாங்க..நாம சொல்ல விரும்புறது ஒன்னேஒன்னு தான்..அரசியலெல்லாம் ரொம்ப கஷ்டம் ப்ரோ:-)

ஓவர் ஆல்,விஜய் ரசிகர்களுக்கு 'தலைவா' ஒரு விஷுவல்ட்ரீட்.படம் ரிலீஸானதும் ரசிகர்களுக்கு தீபவாளிதான்!மற்றவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.மொத்தத்தில் விஜய் தன் ரசிகர்களுக்கு சொல்லவர்றது இதுதான்-NOW TIME TO LEAD!