செவ்வாய், 14 ஜனவரி, 2014

வீரம்- இது 'தலப்பொங்கல்'

எந்த ஒரு நடிகரின் ரசிகனுக்கும் தன் ஆதர்ச நாயகனை சில கேரக்டர்களில் அல்லது சில மாஸ் சீன்களில் நடித்து,தான் பார்க்கவேண்டும் என்பது பெரும் கனவாய் இருக்கும்.உதாரணத்திற்கு பாட்ஷாவில் வரும் தலைவரின் 'அடி பம்ப்' பைட் சீன் போல ஒரு படத்திலாவது தனக்கு பிடித்த நடிகன் நடித்துவிடவேண்டும் எல்லா ரசிகனுக்கும் உள்ள ஆசை.தல ரசிகர்களை பொறுத்தவரை,அஜித்தை ஒரே மாதிரியான கோட் சூட் கெட்டப்பிலும்,மாடர்ன் ட்ரெஸ்ஸிலும் பார்த்து சலித்து போனவர்களுக்கு,இந்த படத்தில் வரும் வெள்ளை வேஷ்டி,வெள்ளை சட்டை லுக் நிச்சயமா செம ரெஃப்ரெஷ் தான்.சிவாவை பத்தி மொத படத்துலையே தெரியும்ன்றதால,படத்தில் வீசும் தெலுங்கு மசாலா வாசமும்...எதுக்கெடுத்தாலும் 'டாஆஆஆஆய்ய்' ஹைபிச்ல வில்லன்கள் கத்துறதும் பெரிய லெவெல்ல நம்மள பாதிக்கல:-p


டைரக்டர் சிவா பேன்ஸ் அஜித்கிட்ட என்ன எதிர்பாக்குராங்கன்றதை தெளிவா புரிஞ்சிகிட்டு அதுகேத்தமாதிரி காட்சிகளை அமைச்சிருக்குறாரு.படத்தின் மிகப்பெரிய பலமும் அதுவே.இடைவேளைக்கு முன் வர்ற அந்த ட்ரெயின் பைட் சீனும்,பேக்ரவுண்ட்ல வர்ற 'ரத கஜ துரக பதாதிகள்' டியுனும்செம்ம..இடைவேளை வர்ற தாடி வச்ச கெட்டப் நல்லாத்தான் இருக்கு.ஆனா இடைவெளிக்கு அப்புறமா தாடி எடுத்துட்டு வர்றப்ப தலைக்கு வயசானவர் லுக்கு வந்துடுது.சீக்கிரம் இந்த ஒயிட் கேர்'க்கு ஒரு எண்டு கார்ட் போடுங்க தல.



பர்ஸ்ட்ஆஃப் முழுக்க சந்தானத்தோட காமெடி,கொஞ்சம் தம்பிங்க சென்டிமென்ட்,தமன்னா கூட ரொமான்ஸ்ன்னு ஜாலியா போகுது.சந்தானத்துக்கு காட்டுபூச்சி அளவுக்கு இதுல ஒர்க்அவுட் ஆவலன்னாலும்,மோசமில்ல.தமன்னாவை பொறுத்தவரை பெருசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல:-p


கதைப்படி அஜித்துக்கு நாலு தம்பிங்க..அதுல பாலாவையும்,விதார்த்தையும்
தவிர மத்த ரெண்டு பேரு முகம்கூட சரியா நியாபகத்துல இல்ல.அவ்ளோதான் படத்துல அவுங்க வேல்யூ.இடைவெளிக்கு அப்புறமா தமன்னா ஊருக்கு போற தல,அங்க அந்த குடும்பத்தை பழிவாங்க நினைக்கிறவங்கள்ட்டருந்து அவுங்களை காப்பத்தினாரா இல்லையான்றது தான் மீதிக்கதை.இடையில இடையில மானே தேனேன்னு டி.எஸ்.பி மொக்கையா நாலு ட்யூன் போட்டு நம்மள வெறுப்பேத்துறாரு.தூக்கு தண்டனை கைதியான வில்லன் அதுல் குல்கர்னி,கிளைமேக்ஸ்ல போலிஸ் ஜீப்ல இருந்து தப்பிச்சு,அஜீத் கூட சண்டை போடுறாரு.ஏன் பாஸ்,ஒரு தூக்குதண்டனை கைதியை இவ்ளோ ஈஸியாவா தப்பிக்க விடுவாங்க?!அது சரி,ஆமை வடைக்குள்ள ஆமைய எதிர்பாக்குறவனுக்கும்,மசாலா படத்துல லாஜிக் எதிர்பாக்குறவனுக்கும்
ஏமாற்றம் தான் மிஞ்சும்ங்கிறதால அதையெல்லாம் லூஸ்ல விட்ருவோம்:-)




மொத்தத்தில் படத்தை சுவாரஸ்யமாக்குவது தல’யின் ஸ்க்ரீன் பிரெசன்ஷும்,டைரக்டர் சிவாவோட சரியான மசாலா மிக்சிங்கும் தான்!வீரம்-தல ரசிகர்களுக்கு பார்த்தே தீரவேண்டிய படம்.சினிமா ரசிகர்களுக்கு ஒருதடவை பாக்கலாம் டைப்! 

அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துகள்:-))

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மதயானைக்கூட்டம்/சூப்பர் சிங்கர் -ஃபுல் மீல்ஸ்05/01/14


இன்றோடு சகா பக்கங்கள் ப்ளாக் ஆரம்பிச்சு,ஒருவருஷம் ஆகிடுச்சி!!இந்த ஒருவருசத்துல உருப்படியா எதும் எழுதியிருக்கிறேனான்னு தெரில.ஆனா இனி வரும் நாட்களில் நிறைய,அதே சமயத்துல கொஞ்சம் கன்சிஸ்டன்ஸியோடும் எழுத ஆசையிருக்கு.எப்போதும்போல் உங்கள் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையோடு பயணத்தை தொடர்கிறேன்:)

பார்த்த படம்: மதயானைக்கூட்டம் 

என்னது சிவாஜி செத்துட்டாரான்ற ரேஞ்சுல ஃபீல் பண்ணாதீங்க.இந்தப்படம் பாத்ததும் சில விசயங்கள் பகிர்ந்துக்கனும்னு தோணுச்சி.அவ்வளவே!தமிழ்சினிமாவுக்கு இன்னும் ஒரு  தேவர் சமூகத்த பத்தின  படம்.டைரக்டர் விக்ரம் சுகுமாரனுக்கு இது முதல் படமாம்!



தெக்கத்தி பக்க கள்ளர் மக்களின் வாழ்கையை,அவர்களுடைய கல்யாணம் முதல் இறப்பு வரையிலான அத்தனை சடங்குகளையும் செம டீடெயில்டா காமிச்சியிருக்குறாரு..படம் பாக்குறப்ப அடிக்கடி தேவர்மகன் படம்தான் மைண்ட்ல வந்துச்சி!கிட்டத்தட்ட அதேமாதிரியான ஒரு களம்.அதே மாதிரியான கவுரவத்திற்க்காகவும்,குடும்ப பகைக்காகவும் நடக்கும் பழிவாங்கல்கள்.ஆனா தேவர்மகனை விட இந்த படத்துல வன்முறை மிக அதிகம்.நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதட்டத்தோடவே பார்த்த படம் இது.படத்தோட கதை இதான்,ஜெயக்கொடிதேவர்ன்னு ஊர் பெரியவரு.அவருக்கு இரண்டு மனைவிகள்.மூத்த சம்சாராமாய் நடிகை விஜி.இளைய சம்சாரத்தின் மகனாக ஹீரோ கதிர்.மூத்த குடும்பத்துக்கும்,இளைய குடும்பத்திற்கும் இடையேயான பங்காளிக தகராறு.இந்த ரெண்டு குடும்பத்துக்கும் பொதுவான ஒரு எதிரி.ஜெயக்கொடி தேவர் எதிர்பாரமால் இறந்ததும் ஆரம்பிக்கிது உரிமைப்போர்.சாவுவீட்ல விஜியின் மகனாய் நடித்தவரின் வெட்டிவாய் சவாடாலில் ஒரு கொலை விழ,அந்த பழி ஹீரோ கதிரின் மேல் விழுகிறது.அதுக்கு கதிரை பழிக்குபலி வாங்க நடக்கும் முற்சிகளும்,கடைசியில் பலி வாங்கப்பட்டரா இல்லையா என்பதை, பின்பாதி முழுக்க ரத்தம் தெறிக்கதெறிக்க சொல்லி முடித்திருக்கிறார்கள்.அதுவும் கிளைமேக்ஸும் அதற்கு முந்தைய காட்சிகளும் இப்படிஎல்லாம் நடக்குமா?அல்லது இப்படியும் மனிதர்களா என யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது.என்னைப்பொறுத்தவரை, மதயானைகூட்டம் டைரக்டரின் மெனக்கெடல்களுக்காகவும்,விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் பார்க்கலாம்.எனக்கு பிடிச்சிருந்துச்சி! 


சூப்பர் சிங்கர்:

விஜய் டிவில வர்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் மிஸ் பண்ணாம பார்க்கிற ஒரு ப்ரோக்ராம்.சவசவன்னு போயிகிட்ருந்த போட்டி, டாப் 10க்கு அப்புறம் இப்பதான் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.அதும் போனவாரம் சிறப்பு விருந்தினரா ரஹ்மான் வந்திருந்த ப்ரோக்ராம்..வாவ்,செம!



இசையில எல்லா உச்சமும் தொட்டாச்சு,இனி வாங்குறதுக்கு எந்த விருதுகளும் இல்லை.அந்தளவுக்கு சாதனைகள் பண்ணிட்டு,இவரால எப்படித்தான் இவ்ளோ அடக்கமாவும்,அமைதியாவும் இருக்கமுடியிதோ?!இந்த பாவனா புள்ள,நமக்கே எரிச்சல் வர்ற அளவுக்கு அவரை புகழ்ந்து தள்ளுது,பத்தாததுக்கு அங்க சுத்தி இருக்கவங்கள்ல இருந்து சச்சின் வரைக்கும் ஆளாளுக்கு இவரை பத்தி பெருமையா பேசுறாங்க.ஆனா இவரோ,யாரைபத்தியோ பேசுறமாதிரி எல்லாத்தையும் ஒரு சின்ன ஸ்மைலியோட கடந்து போயிடுறாரு.இந்த குணத்தால தானோ என்னவோ,இன்னமும் அவரால அந்த உயரத்தை தக்க வச்சிகிட்டு இருக்கமுடியுது போல.ரஹ்மானின் இசை மட்டுமல்ல ரஹ்மானும் ஸ்பெஷல் தான்!

எல்லாம்சரிதான்,ஆனா சூப்பர் சிங்கர் பாக்குறப்ப,அடிக்கடி இது தமிழ் ப்ரோகிராம்தானா?இல்லை மலையாள ப்ரோக்ராம் எதுவமான்னு டவுட் வருதே?ஏன் அப்படி?! இதே பிரச்சனை உங்க ஆருக்காச்சும் இருக்குதா? :-p

தன்னம்பிக்கை டானிக்:

எல்லாரும் சம்பாதிக்கிறோம்,செலவு பண்றோம்...மறுபடி சம்பாதிக்க ஓடிகிட்டேயிருக்கோம்.யாருக்கும் சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்க ஒரு நொடி கூட நேரமில்ல.நான்,எனக்கு இதைத்தாண்டி வேறேதையும் அதிகம் யோசிக்கிறதுமில்ல,என்னையும்சேத்து தான்.


ஆனா இந்த வீடியோவை பாத்ததுக்கு அப்புறம் எனக்குள்ளையே நிறைய கேள்விகள்.இந்தமாதிரி இளைஞர்கள் தான் இப்போ இங்க தேவை.ஹாட்ஸ் ஆப் யூ மேன்!யூ ஆர் மை இன்ஸ்ப்ரேசன்!

புதன், 1 ஜனவரி, 2014

வெல்கம் 2014

வழக்கம்போல 2014-ஆம் வருடமும் நிறைய எதிர்பார்ப்புகளுக்கும்,கனவுகளுக்கும் மத்தியில் பிறந்துள்ளது.புத்தாண்டு வாழ்த்து பதிவை நேத்தே எழுதனும்னு நினைச்சிருந்தேன்.ஆனால்,வழக்கம்போல் இந்த சோம்பேறித்தனம் வந்து மனசுக்குள் 'காப்ரே' டான்ஸ் ஆடினதால தாமதமாய் இந்தப்பதிவு.ஒருவேளை நேத்தே எழுதியிருந்தேன்னா,போன வருசத்துல நடந்த வெறுப்பேற்றிய விசயத்தையெல்லாம் சொல்லி பொலம்பியிருக்ககூடும்.ஆனால் இன்னைக்கு எழுதுறதால நோ பொலம்பல்ஸ்.பாசிட்டிவாத்தான் ஆரம்பிச்சு பாப்போமே!!


2013ஐ பொருத்தவரைக்கும் நல்ல விசயங்கள்னா அது வாசிப்பு நேரம் அதிகமாயிருக்கு.மெதுமெதுவா ஆரம்பிச்சு இந்த இலக்கிய சண்டைகள் எல்லாம் கொஞ்சூண்டு புரியிற அளவுக்கு முன்னேறியிருக்கேன்.அடுத்த டார்கெட்,நாமளும் களத்துல எறங்கி..இலக்கிய சண்டையில சட்டைய கிழிச்சிகிட்டு அலையிறதுதான்!:-p வாசிப்புன்னு சொன்னதும் ஒரு விசயம் நியாபகத்துக்கு வருது.ஆரம்ப கட்ட வாசிப்புகளை,வாத்தியாரின் எழுத்துகளில்இருந்துதான் ஆரம்பிச்சேன்.அந்த விறுவிறுப்பும்,சுவாரஸ்யமும் தான்,அதற்குப்பிறகான தொடர் வாசிப்பு ஆர்வத்திற்கு அடித்தளமா இருந்திச்சு.சோ,என்னோட சஜ்ஜசன்..புதுசா வாசிக்க ஆரம்பிக்கிறவங்க,முதலில் வாத்தியார் சுஜாதா அவர்களின் எழுத்துலிருந்து ஆரம்பிப்பது சர்வ உத்தமம்.

கடந்த ஆண்டை பொறுத்தவரை தமிழ் சினிமாவை மொக்க காமெடி படங்களுக்கு தாரை வாத்து குடுத்தாச்சு.இடையில வந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,மூடர்கூடம்,விடியும்முன் மாதிரியான சில நல்ல படங்களும் இந்த மொக்க காமெடி அலையில சிக்கி காணாமப்போயிருச்சி.காமெடின்ற பேர்ல நம்மள டார்ச்சர் பண்ணின மொக்கை சிவாவின் படங்கள்,தேசிங்குராஜா மாதிரியான காமெடி(?) படங்களை பாத்து எனக்கு ஒரே குழப்பமாயிருச்சு.டாக்டரை போய் கன்சல்ட் பண்ணனுமோன்னு கூட நெனச்சேன்.ஏன்னா,அந்தளவுக்கு சிலமக்கள் அந்த காமெடிக்கு விழுந்துவிழுந்து சிரிச்சாங்க.என்னகொடும சார் இதுன்னு மனசுக்குள்ளயே சொல்லிக்க வேண்டியதாயிடுச்சி.ஒருவழியா கடசியா வந்த ஆல் இன் ஆல் அழகுராஜா செம பல்ப்பு வாங்கி வயித்துல பீரை வாத்துச்சி:)இந்த வருசமாச்சும் இந்த கொடுமையில இருந்தெல்லாம் தப்பிக்க முடியுதான்னு பாப்போம்.

அப்புறம் இந்த சகாபக்கங்கள் ப்ளாக் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது.அதிகமாவும்,உருப்புடியாவும் எதுவும் எழுதலைன்னு எனக்கே தெரியிது.இந்த வருசத்திலிருந்து நிறைய எழுத முயற்சிக்கலாம்னு இருக்கேன்(ஆரும் தப்பிக்கமுடியாது)..எந்த வருசமும் நியு இயர்க்கு பெருசா  Resolutionலாம் எடுத்ததில்ல(நம்மளபத்தி நமக்கு தெரியாதா?!)..ஆனா இந்த தடவ சில பல உறுதிகள் எடுத்திருக்கிறேன்.பாப்போம்..எத்தனை நாளைக்கு கரெக்டா செய்யமுடியிதுன்னு..ஸ்டார்டிங் நல்லா இருக்குற மாதிரியே ஃபினிஷிங்கும் நல்லாயிருக்கனும்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிறேன்.நண்பர்களுக்கும்,அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.