சனி, 12 ஜனவரி, 2013

தமிழ் இனி மெல்ல சாகுமா??-ஓர் அலசல்

 இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்த தமிழன் இன்றைய தமிழனுடன் பேசமுடியும்.வேறெந்த மொழியிலும் இந்த சிறப்பு இல்லை -எழுத்தாளர் சுஜாதா.

இது ஒரு சின்ன உதாரணம்தான்..இதுப்போல் எத்தனையோ சிறப்புகள் தமிழுக்குண்டு..தமிழ் மொழியின் பெருமைகளைப்பத்தி பேசணும்னாஇந்த ஒரு பதிவு போதாது!!


எல்லாமும் சரி..ஆனால் கொஞ்சம் கனவு கலைத்து பார்த்தால் நிதர்சனம் நிச்சயம் வேறாகத்தான் இருக்கும்..
இன்று உள்ள சமுதாயம் தமிழலில் பேச வெட்கப்படக்கூடிய சமுதாயமாக மாறி வருகிறது என்பதுதான் உண்மை.தமிழ் என்பதுபோய் இப்போது டமில் ஆகிவிட்டது..கேட்டால் ஃபேஷனாம்!!
நான்பார்த்த வரையில்,தமிழனை தவிர மற்ற மொழிபேசுபவர்கள் அது இந்தியாவிற்கு உள்ளோ அல்லது வெளிநாடுகளோ..நிச்சயம் அவர்கள் மொழியில் பேச வெட்கப்படுவதில்லை..மாறாக இது என் மொழி, உனக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் அதை பேசுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது என்பதுதான் பலரது நிலைபாடும்!!


வடஇந்தியர்கள் பலரும் பேசும்போது நீங்கள் கவனித்திருக்கலாம்..அவர்கள் பேச்சில் மிகமிககுறைந்த அளவே ஆங்கிலகலப்பு இருக்கும்..ஆனா இங்கே ஒரு வாக்கியத்தை ஆங்கிலம் கலக்காமல் சொல்வது என்பதே மிக கடினமான காரியமாகிவிட்டது.

தீர்வுதான் என்ன??
                   
                    பாஸ் என்ன சொல்றீங்க??நாங்க கார்ப்பரேட் கம்பெனில வேலை பாக்குறோம்..அங்கே போய் தூயதமிழ்ல பேசிக்கிட்டு இருக்கமுடியுமா?ன்னு கேக்குறவங்களுக்கு நான் ஒன்னே ஒன்னுதான் சொல்ல விரும்புறேன்..உங்களை யாரும் இப்போ ஆங்கிலம் பேசவேண்டாம்னோ அல்லது நான் ''தானியங்கி மூவுருளி''(ஆட்டோ ரிக்ஸா)யில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் அப்படின்னு தூய செந்தமிழ்லயோ பேசனும்னு சொல்லல..!

குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களிடம்,உங்கள் உறவுகளிடம் உங்களுக்கு தெரிந்த தமிழில் பேசுங்கள்..அரைகுறையாய் ஆங்கிலத்தில் பேசுகையில் வரும் கர்வம் தமிழில் பேசுகையில் ஏன் வெட்கமாய் மாறவேண்டும்??!
இது நிச்சயம் ஒரேநாளில் நடந்துவிடகூடிய அதிசியம் அல்ல..நீங்கள் டீக்கடைக்கு போய் ஒரு தேநீர் வேண்டும் என்று கடைக்காரரிடம் கேட்டால் அவர் உங்களை விநோதமாக பார்க்கவே வாய்ப்புகள் அதிகம்..ஆனால் அதை பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்து பேசினால் நிச்சயம் ஒருநாள் பழக்கத்திற்கு வந்துவிடும்..மற்ற மாநிலத்துகாரர்கள் அவர்கள் தாய்மொழியில் பேச எந்தவித வெட்கமோ/தயக்கமோ காட்டுவதில்லை..பின் நாம் மட்டும் ஏன் இப்படி??


தமிழில் பேசுவதற்கு வெட்கபடுவதற்க்கு பின்னால் இன்னும் ஏதோவொரு அடிமைத்தனம் ஒளிந்திருப்பதாகவே கருதுகிறேன்..தமிழன் கடைசிவரை தமிழனாய் இருக்கும்வரை நிச்சயம் தமிழுக்கு அழிவில்லை!!உங்களை சங்கம் வைத்து தமிழ் வளர்க்க சொல்லவில்லை.குறைந்தபட்சம் சங்கடப்படாம தமிழ்ல பேசுங்கன்னு தான் சொல்றேன்..

இனி தமிழில் பேச பெருமைப்படுவோம்..தமிழன் என்பதில் கர்வோம் கொள்வோம்!!

 குறிப்பு :நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..பதிவு பற்றி உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்..

இன்னும் பேசுவோம்..
சகா..

1 கருத்து: