வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

கோலிசோடா/Moebius கொரியன் சினிமா


இங்கு எல்லோருக்கும் ஏதோ ஒரு அடையாளம் நாம் விரும்பியோ,விரும்பாமலோ இந்த சமூகத்தால் நமக்கு கொடுக்கப்படிருக்கிறது.பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ நாமும் அந்த அடையாளங்களை சுமந்து திரிந்தே வாழ பழகிவிட்டிருக்கிறோம்.ஆனால் எந்த அடையாளங்களுமே இல்லாமல்,ஏன் அவர்களின் உண்மையான பெயர்கூட மற்றவர்களுக்கு தெரியாமல்,அவரவர் வாய்க்கு வசதியான பெயர்களால் அழைக்கப்பட்டு,ஒருக்கட்டதில் அதில் ஏதோ ஒரு பெயராகவே மாறிவிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படி எந்த அடையாளமும் இல்லமால் வாழ்பவர்களுக்கு திடீரென ஒரு அடையாளம் கிடைக்க அதை எப்படியாவது தக்க வைத்துகொள்ள போராடும் நான்கு பசங்களின் கதைதான் கோலிசோடா!!


நாலு பசங்க,அப்புறம் கோயம்பேடு மார்கெட் தான் கதைக்களம்னு சொன்னதும் அங்காடி தெரு டைப் கதையாஇருக்கும்னு நினைச்சா..சர்ப்ரைஸ்!!பசங்க படத்துல வர்ற அதே டீம் தான் இந்த படத்துலயும்..படம் ஆரம்பத்துல கொஞ்சம் ஸ்லோவோ இருந்தாலும் கதைக்குள்ள போக ஆரம்பிச்சதும் விறுவிறு தான்..கோயம்பேடு மார்க்கெட்டையே கன்ட்ரோல் வச்சிருக்க வில்லன்,ஒரு சந்தர்பத்துல அவனை பகைச்சிக்க வேண்டிய கட்டாயம் இந்த நாலு பசங்களுக்கும் ..அந்த பணபலமும் ஆள்பலமும் உள்ள கூட்டத்தை எதிர்த்து ஜெயிச்சாங்களா, தங்களோட லட்சியத்தை அடஞ்சாங்களா இல்லையான்றது தான் கிளைமேக்ஸ்.

படத்துல நாலு சின்னபசங்க சேந்து அத்தனை ரவுடிகளையும் அடிக்கிறது,கிளைமேக்ஸ்ல அத்தாம்பெரிய மார்க்கெட் தாதாவை அசால்ட்டா கடைக்குள்ள கட்டம் கட்டுறதுன்னு நிறைய தில்லாலங்கடித்தனங்கள் இருந்தாலும் திரைக்கதையோட வேகத்துலயும்,அந்த இடத்துல பசங்க அடிவாங்குறப்ப எப்படியாச்சும் வில்லனுகளை திருப்பி அடிச்சிடனும்னு நம்ம மனசு தவிக்கிறதுலயும் மத்த லாஜிக் கேள்விகள் எல்லாம் மறந்துபோயிடது.மோர் ஓவர்,நம்ம மாஸ் ஹீரோக்கள் ஹீரோயிசம்னு நினைச்சு பண்ற அக்கப்போர்களை கம்பேர் பண்றப்ப இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல!மொத்ததுல கோலி சோடா மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு!!
@@@@@@@@@@@@@@@@@@@

சில தினங்களுக்கு முன் இயக்குனர் வசந்தபாலன் ஒரு கொரியன் படத்தை பத்தி அவரோட முகப்புத்தகத்துல இப்படி எழுதியிருந்தாரு."உங்களுக்குஉண்மையாவே கட்ஸ் இருந்தா இந்த படத்தை பாருங்க"ன்னு சொல்லி ஒரு படத்தை பத்தி சொல்லியிருந்தாரு.அந்த படம் பேரு 'Moebius' .சரி அப்படி என்னதான் இருக்குதுன்னு நெனைச்சி அந்த படத்தை பாக்கனும்னு முடிவு பண்ணினேன்.பெரும்பாலும் ஹாரர் டைப் படங்களில் தான் கொரியன்ஸ் கில்லி..இதுவும் அதுமாதிரி படமாத்தான்  இருக்கும்னு நினைச்சேன்.பட்,இது டோட்டலா வேறமாதிரி.நம்ம ஊரை பொருத்தவரைக்கும் காமம்-ன்றது பொதுவெளியில் பேசக்கூடாத ஒரு அசிங்கமான விஷயம்.இங்க செக்ஸை பற்றிய புரிதல்களும் மிக கம்மி.ஒரு வயது வந்த ஒரு பையனோ,பெண்ணோ தங்களுக்கு வர்ற உடல்ரீதியான சாதாரண சந்தேகங்களை கூட அப்பா அம்மாகிட்ட பேசி தீர்த்துக்கமுடியாது.அந்த சந்தேகங்களை போக்கி தெளிவடையனும்னா ஒரு மூணாவது மனிதரோ அல்லது நண்பர்களின் உதவியையோ தான் நாடணும்.


ஆனா  இந்த படத்துல ஒரு தனிமனிதனின் உணர்ச்சிகளுக்கு கொடுக்கப்படுற முக்கியத்துவம் கவனிக்கத்தக்கது.ஒரு அப்பா,அம்மா,மகன் இந்த மூவருக்குள்ளும் நடக்கிற உணர்வு போராட்டங்கள் தான் படம்.முதல் சீன்லயே கதைகுள்ள போக ஆரம்பிச்சிடுறாரு இயக்குனர் 'Kim Ki-duk'. படத்தோட முதல் சீன்லருந்து கடைசி சீன் வரைக்கும் ஒரு டையலாக் கூட கிடையாது.ஆனா அது படத்தை எந்த விதத்துலயும் பாதிக்கல.இன்னும் சொல்லப்போன அந்த நடிகர்களின் நடிப்புக்கு வசனங்கள் தேவையே இல்ல!அப்பாவிற்கு ஒரு பெண்ணுடன் தகாத உறவு,அதுனால அப்பா அம்மா ரெண்டு பேருக்குள்ளேயும் சண்டை..ஒருகட்டத்தில அந்த சண்டை வெறியாய் மாறி,கணவனை எதுவும் செய்யமுடியாத கோபத்தில் தன் மகனோட ஆண்குறியை வெட்டிடுறாள்.அதுனால பாதிக்கப்படுற அந்த பையன் படுற அவமானங்களும்,தன் குற்றத்தை உணர்ந்து..அந்த அவமானங்களிலிருந்து தன் மகனை எப்படியாச்சும் காப்பாத்தி பழைய நிலைக்கு கொண்டு வந்திடனும்னு நினைக்குற அப்பாவின் போராட்டமும்..தன்னாலதானே இப்படி தன் மகனுக்கு ஆச்சு என நினைத்து உருகும் அம்மவோட மனகுமுறலும் தான் மீதிப்படம்.

நிச்சயம் எழுத்துக்களால் அந்த படம் தந்த  உணர்வுகளை முழுசா கொண்டுவர முடியும்னு தோணல.நம்ம ஊரை பொருத்தவரைக்கும் இந்த கதையும்,மனிதர்களும் நடைமுறை சாத்தியமே இல்லாத ஒன்று என்றாலும்..ஒரு படமாய் மனதை வெகுவாய் பாதித்துவிட்டது.Strictly for 16+ 

1 கருத்து:

  1. சில தினங்களுக்கு முன் இயக்குனர் வசந்தபாலன் ஒரு கொரியன் படத்தை பத்தி அவரோட முகப்புத்தகத்துல இப்படி எழுதியிருந்தாரு."உங்களுக்குஉண்மையாவே கட்ஸ் இருந்தா இந்த படத்தை பாருங்க"ன்னு சொல்லி ஒரு படத்தை பத்தி சொல்லியிருந்தாரு.
    -----------------------

    He didn't update his Facebook from Aug 26/13 so how did u got the link ?

    பதிலளிநீக்கு