வியாழன், 15 மே, 2014

த்ரிஷ்யம் விமர்சனம்

 இந்த படத்தை பற்றி எழுத ஆரம்பிப்பதற்கு முன் "கீபோர்ட் தேயத்தேய எல்லாரும் இந்த படத்தை பத்தை எழுதிட்டாங்க..கண்ணு எரியஎரிய நாமளும் எல்லாத்தையும் படிச்சு களைச்சாச்சு!இதுக்கு மேலேயும் இந்த படத்தை பத்தி எழுதணுமான்னு" ஒரு எண்ணம் வந்தது என்னவோ உண்மை.ஆனாலும் தெரியாத்தனமா ஏதாவது ஒரு சூரமொக்கை படத்துக்கு போயி வெளில வந்ததும்..பிரெண்ட்ஸ்க்கு போனை போட்டு "மாப்ள தயவுசெஞ்சு அந்த படத்துக்கு போயிறாதரா...த்தா சாவடிச்சுட்டானுக" என எப்படி பொங்குகிறோமோ அதே மாதிரி ஒரு நல்ல படைப்பை பார்த்து அது மனதிற்கு பிடித்துபோய்விட்டால்,அதை தனக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்வதும் ஒரு சினிமா ரசிகனின் கடைமைதான்.அதுமட்டுமில்லாது ஒரு நல்ல படைப்பை பாராட்டுவதையும்,கொண்டாடுவதையும் விட வேறெப்படி அந்த படைப்பிற்கு மரியாதை செலுத்திவிட முடியும்?!


இந்த படம் மொத்தம் ரெண்டே முக்கால் மணிநேரம்.இப்பல்லாம் ரெண்டேகால் மணிநேரத்திற்கு அதிகமாக ஒரு படம் ஓடினாலே மக்கள் கடுப்பாக ஆரம்பிச்சிடுறாங்க.அந்த அளவுக்கு யாருக்கும் பொறுமை இல்லாமல் போய்விட்டது...இரண்டே முக்கால் மணிநேரம் ஒரு ரசிகனை போரடிக்காமல் உட்கார வைக்கவேண்டும்.அதைவிடவும் முக்கியம் அத்தனை மணிநேரம் செலவு செய்வதற்க்கு அந்த படம் ஒர்த்'தாக இருக்கவேண்டும்.த்ரிஷ்யம் பட இயக்குனர் 'ஜீது ஜோசப்' தனது அபாரமான திரைக்கதையால் அதை அசால்ட்டாக செய்து காட்டியிருக்கிறார்.

கணவன்,மனைவி இரண்டு பெண் குழந்தைகள் என அழகான ஒரு குடும்பம்.அது தங்களுக்காக படைக்கப்பட்ட சொர்க்கம் என சந்தோசமாய் வாழ்பவர்களின் வாழ்க்கையில் ஒரு புது நபர் உள்ளே நுழைய அதனால் ஏற்படும் பிரச்சனை,சராசரி குடும்பஸ்தனான மோகன்லால் அந்த பிரச்னையை அதுவும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக எப்படி எதிர்க்கொண்டு சமாளிக்கிறார் என்பதுதான் கதை.லாலேட்டன் நன்றாக நடித்திருக்கிறார் என்று எழுதினால் அது நூற்றாண்டு கிளிசேத்தனமாய் மாறிவிடும்.ஆனாலும் வேறு வழியில்லை.மனுஷன் பின்னியிருக்கிறார்.குறிப்பாய் அவர் கதாப்பாத்திரத்தை வடிவமைத்த விதம் கிளாஸ்..கேபிள் டிவி நடத்தும் மனிதராய் வருகிறார்.சினிமா வெறியர்.இன்னைக்கு வீட்டுக்கு வரல கடையிலேயே படுத்துக்கிறேன் என வீட்டில் சொல்லிவிட்டு..இரவு டிவியில் பலான பாடலை பார்த்ததும் மூடாகி கட்டுபடுத்த முடியாமல் வீட்டுக்கு போயி மனைவியிடம் வழிவதும்,காலையில் சின்னமகள் 'ஏன்ப்பா நைட்டு வரமாட்டேன் சொல்லிட்டு அப்புறம் வந்தீங்க?' என கேட்கையில் சமாளித்து மலுப்புவதுமாய் லாலேட்டேன் எல்லா பந்திலும் சிக்சர் அடித்திருக்கிறார்.

படம் ஆரம்பித்து ஒரு மணிநேரம் வரை 'ச்சே என்ன ஒரு அழகான சந்தோசமான குடும்பம்..கடைசிவரை இப்படியே இருக்கனும்'என நாம் நினைக்கையிலேயே மூத்த பெண் வடிவில் சிக்கல் வர,அங்கு திரியை பற்ற வைக்கிறார் இயக்குனர்.அது கொஞ்சகொஞ்சமாய் பரவ ஆரம்பித்து இடைவேளைக்கு பின் வெடித்து சிதறுகிறது.

பாராட்டுவதற்கு நிறைய விசயங்கள் இருந்தாலும் சில நெருடல்களும் இருக்கவே செய்தன.என்னதான் லாலேட்டன் எல்லா படங்களையும் பார்த்து பல விஷயங்கள் தெரிந்தவரை காண்பிக்கப்பட்டாலும்..ஒரு கொலையை மறைக்க இத்தனை நேர்த்தியாய் ஒரு சாதாரண மனிதனால் யோசிக்கமுடியுமா என்று தோன்றியது.புதிதாய் கட்டிகொண்டிருக்கும் காவல் நிலையம் என்றாலும் மோகன்லால் வருவதையோ,அல்லது புதைத்துவிட்டு போவதையோ எந்த காவலர்களும் பார்க்கவேயில்லை என்பது சற்றே உறுத்தியது.

இதுவேற இல்லாம இது எந்த படத்தோட உருவல்ன்னு ஒரு தனிப்படையே அமைச்சி ஆராய்ச்சி செய்துகிட்டு இருக்காங்க.எது எப்படியோ இது ஒரு பரபர த்ரில்லர் மூவி.எல்லாரும் பாத்துருப்பிங்க.பாக்காதவங்க கண்டிப்பா பாருங்க.ஆஹா மீனாவை பத்தி சொல்லாம விட்டுட்டனே!என்ன சொல்றது ஆன்ட்டி ஆனாலும் இன்னும் உங்க அழகு உங்களை விட்டு போவலைங்க..ஹிஹி

எழுதி முடிச்சிட்டு படிச்சி பாத்தா பல இடங்கள்ல ஜாக்கி'த்தனம் எனக்கே அப்பட்டமா தெரிஞ்சிது.என்ன பண்றது,அதை படிச்சி வளந்தவிங்க தானே நாமெல்லாம்..நாடி நரம்புல எல்லாம் அது கலந்திருக்கத்தான் செய்யும்! :-)


5 கருத்துகள்:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  2. கதையை சொல்லாமல் விமர்சனம் செய்தது நன்று... ஜாக்கியும் கூட அப்படித்தான் விமர்சனம் எழுதியிருந்தார். முதல் முக்கால் மணி நேர காட்சிகள் தேவையில்லை என்று நினைத்திருந்தேன், கிளைமாக்சில் அதை சரிகட்டிவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  3. //என்ன சொல்றது ஆன்ட்டி ஆனாலும் இன்னும் உங்க அழகு உங்களை விட்டு போவலைங்க//
    இதுல தானே படத்தோட ட்விஸ்ட் டே இருக்கு.

    பதிலளிநீக்கு